கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தில் பயணித்தபோது படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதி நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்வதற்கான உத்தரவினை கொடிகாமம் பொலிஸார் நீதிமன்றில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் முறையிட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருக்கின்றனர்.
இதேவேளை நேற்றைய நாள், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளரை அழைத்த கொடிகாமம் பொலிஸார் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக அறிந்ததாக விசாரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளமையுடன் உயிரிழந்தவர் கெற்பெலி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி